Wednesday, March 14, 2012

Engum nee! Ethilum nee!! / எங்கும் நீ! எதிலும் நீ!!


கனவில் ஒரு கண்ணாடி..
விழுந்தது உன் முன்னாடி..
நூறு முகம் அம்மாடி..
அழகு ஒரு தேவதை!

தனிமையில் நான் இருக்கையிலே..
உன் நினைவு என்னை இடிக்கையிலே..
எனை மறந்து சிரிக்கையிலே..
நொடிகள் அது மந்திரம்!

நூறு யுகம் உன்னோடு..
வாழ்ந்து விட்டேன் நெஞ்சோடு..
உலகம் உன்தன் விழியோடு..
நாட்கள் அது ஓவியம்!

உன் அன்பு எனக்கெனதாய்..
என் நாட்கள் உனக்கெனதாய்..
நம் காதல் நமக்கெனதாய்..
காலம் அது கவிதை!

உயிர் உருகி நின்றோம்..
நமை பிரிய மறந்தோம்..
வியிலும் கலந்தோம்..
காதல் அது தெய்வீகம்!

மரணத்தின் ஒலியே..
விதி செய்த சதியே..
எனை பிரிந்தாய் ரதியே..
நினைவு அது போராட்டம்!

கனவுகள் தந்தாய் மந்திரம் செய்தாய்..
ஓவியம் வரைந்து கவிதைகள் சொன்னாய்..
வலியுடன் வாழ கற்றும் தந்தாய்..
நம் வாழ்க்கை அது காவியம்!

                                                                      எங்கும் நீ! எதிலும் நீ!!
                                                                      அன்புடன் என்றும் உனக்கென நான்!!
                                                                                        - Love you Kutti...

2 comments:

  1. Nice Kim... Cinema Lyrics not a bad idea man:-)

    ReplyDelete
  2. Well, thought of composing my own song. Lyrics just came along with the music I thought :-) Thanks Thendral.. :-)

    ReplyDelete

I don't know what you think about my creation, but every word of you help me grow better and stronger!!